#26 - சந்தி 2 - பத்யங்கள் 52,53,54,55 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி
மோஹன தரங்கிணி இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர் தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன் சந்தி : 2 : ஸௌராஷ்ட வர்ணனை *** அந்தொம்மெ வராஹாவதாரதலி கோ விந்தெ தன்னய பீதாம்பரவ குந்ததெ பூமிகெ போதிஸிதந்திருவுது கந்தஷாலிய வன களிது ||52 முன்னர் ஒரு முறை ஸ்ரீஹரி , வராக அவதாரத்தில் , தன்னுடைய பீதாம்பரத்தை பூமிக்கு போர்த்தினால் என்பது போல - அறுவடை செய்து அறுக்கப்பட்டு போடப்பட்ட நெற்கதிர்களைப் பார்த்தால் அப்படி தோன்றுகிறது . தாளிம்ப கர்ஜூர த்ராக்ஷி ஸௌரபவ தாளிதனேக பூதோட கேளிய வனகளித்தவு புர லக்ஷ்மிய தாளிய மரகததந்தெ ||53 மாதுளை , கர்ஜூர , த்ராக் ஷை , நறுமணம் மிக்க பூந்தோட்டம் , தேங்காய் தோட்டங்கள் ஆகியவை இருந்தன . இவை அனைத்தும் அந்த ஊர் தெய்வமான லட்சுமிதேவியின் தாள மரத்தைப் போல பச்சை பசேலென்று இருந்தன . பலஸு நேரிலு சூத பிசுமந்த ந்யக்ரோத சலபத்ர பில்வாமலக லலிதாஷோக புன்னாக பாதரி ஸலெ கோ மல ஸாலுமரகளொப்பிதவு ||54 பலா , அருகம்புல் , மா , வேம்பு , ஆல , அரளி , பில்வ , நெல்லி , அசோக , ஆகிய பற்பல மரங்...